Sunday, December 16, 2012

விற்பனையில் கொடி கட்டி பறக்கும் புல் மீது நடப்பது போன்ற புதுவகையான செருப்புகள்.(படங்கள் )



மென்மையான புல் மீது நடப்பது போன்ற உணர்வை தரும் செருப்புகளை ஆஸ்திரேலிய நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இதன் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. 
இந்த சிறப்பான செருப்பு வகைகளை குசா என்ற நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இதில் பயன்படுத்தும் புல், செயற்கையானவை என்று அந்த நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இந்த வகையான செருப்புகள் உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்து விட்டது. பேஷன் தொழிலில் ஈடுபட்டு வரும் அழகு நங்கையர்களும் இந்த வகை செருப்புகளை அணிந்து கொண்டு மேடையில் வலம் வரத்தொடங்கி விட்டனர்.

Saturday, December 15, 2012

நாங்க எப்படியான செருப்பு வாங்கலாம்



எல்லோரும் செருப்பு காலுக்கு போடுவது வழக்கம் . ஆண்களும் சரி , பெண்களும் சரி செருப்புகளை அணிகிறோம் . வேலைக்கு செல்பவர்கள், தலைவர்கள் எல்லோரும் சப்பாத்து அணிகிறார்கள் . ஒருவரும் வெறும் கால்களுடன் பாதைகளில் நடப்பதில்லை . நாம் மற்றவர்கள் இப்படி போடுகிறார்கள் , அப்படி போடுகிறார்கள் என்று அவர்களை பார்த்து அதை போல் வாங்க கூடாது . நமக்கு எது பொருத்தமானதாக இருக்கிறதோ அதை தான் வாங்க வேண்டும் . அவர் போடுகிறார் அந்தளவு செருப்பு நானும் அதை தான் வாங்குவேன் என்று உங்களது காலுக்கு இறுக்கமானதோ அல்லது உங்கள் காலை விட பெரிய செருப்புகளையோ அணிய கூடாது .



நமக்கு ஏற்ற அளவு , எங்களது காலுக்கு எப்படியான செருப்புகள் அழகாக இருக்கிறது , அதன் தரம் நல்லதா , நீண்ட நாட்களுக்கு பாவிக்க கூடியதாக இருக்கிறதா என முக்கியமாக பார்த்து வாங்க வேண்டும் . ஆண்களானாலும் , பெண்களானாலும் இதனை முதலில் கடைப்பிடிக்க வேண்டும் . விலை அதிகம் இருந்தாலும் நல்லதாக செருப்பு இருக்க வேண்டும் . நான்கு , ஐந்து அடி நடந்து பார்த்து எமது காலுக்கு பொருத்தமாக , சரியாக இருக்கிறதா என பார்த்து வாங்க வேண்டும் .

இப்போதெல்லாம் முன்னைய காலங்களை போல் செருப்புகளை நீண்ட நாட்களுக்கு பாவிக்க முடிவதில்லை . ஒட்டிய பசை கழன்று விடும் , தைத்த தையல் விட்டு விடும் , செருப்பு வெடித்து விடும் , ஹீல்ஸ் கழன்று விடும் இப்படி பல பிரச்சனைகள் உண்டு . செருப்புகளை டசின் கணக்கில் வைத்திருப்போரும் உள்ளனர் . தமது உடுப்புக்கு ஏற்ற கலரில் காலில் செருப்புகள் அணிவோரும் உண்டு .

பொதுவாக, எல்லா செருப்புகளுமே பார்பதற்கு அழகாக இருக்கும். செருப்புகளின் அழகை பார்க்காமல், தங்கள் உடல் அமைபுக்கு ஏற்றவாறும், அணியும் உடைக்கு ஏற்றவாறும், ஆரோக்கியத்துக்குரியதாகவும் அதை தேர்வு செய்வது அவசியம். 
செருப்பு அணியும்போது, அதற்கு பொருத்தமாக ஆடையை தேர்வு செய்வது முக்கியம். கறுப்பு அல்லது டார்க் கலர் ஆடையை அணிந்துகொண்டு, பிரவுன், சந்தன நிற செருப்புகளை அணிந்தால் பொருத்தமாக இருக்காது. அதேநேரம், கறுப்பு அல்லது டார்க் நிற செருப்பை அணிந்துகொண்டால் பொருத்தமாக இருக்கும். 
ஆடைகளில் மட்டுமே காணபட்ட எம்ராய்டரி வேலைகள் இப்போது நவீன செருப்புகளிலும் இடம்பெறுகின்றன. 
இன்றைய நாகரீக மங்கையர் அதிகம் விரும்பி தேர்வு செய்வது, எம்ராய்டரி வேலைகள் காணப்படும் இந்த செருப்புகளைத்தான்.

Thursday, December 6, 2012

பாரடைஸ் லைனிங் & பேக் வோர்க்ஸ்.


பாரடைஸ் லைனிங் & பேக் வோர்க்ஸ்.

அல்லாஹ்வின் உதவியால் கடந்த 10 வருட கால மாக எமது அதிரையில் மிக சிறப்பான முறையில் புதிய சோஃபா, மற்றும் இன்னும் பல சேவைகளை செய்து வருகின்றோம் என்பதை தெரிவித்துகொள்கின்றோம். அல்ஹம்துலில்லஹ்.


சிறப்பு அம்சங்கள்.
  • எங்களிடம் சைக்கில், பைக், ஆட்டோ மற்றும் கார்ளுக்கான சீட் கவர்.

  • ஆட்டோ டாப் ரேக்ஸீன் 

  • பைக் சேஃப்ட்டி கவர் (safety cover) தைத்து தரப்படும்
  • ஆடரீன் பேரில் ஸ்கூல் பேக், டிராவல் பேக் தயார் செய்து தரபடும்.
  • ஸ்கூல் பேக் ரிப்பேர் செய்து தரப்படும் எனப்தை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிரோம்.
  • வீட்டு ஜன்னல்களூக்கான கர்டைன் (curtain) தைத்து தரப்படும்.
Click to Enlarge
  • IRON Box Table Clothes & Dining Table Clothes
 


TAILORING & DESIGNING

ABU MOHAMED YUSUF NOOR AHMED IBN ISHAK HAJIYAR.
Propriter : Jannath Trading Company & Paradise Lining & Bag Works
                Sethu Road, Adirampattinam - 614 701
                Tanjore Dist. Tamil Nadu.
                Mobile: +91 944 38 63129.

விரைவில் இன்ஷா அல்லாஹ்


Thursday, November 22, 2012

பாதங்களை சரியா கவனிங்க... இல்லைன்னா நிறைய பிரச்சனைகள் வந்துடும்!!!



அனைத்து பெண்களுக்கும் பாதங்கள் நன்கு மென்மையாக பட்டுப் போன்று இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அத்தகைய ஆசை இருந்தால் மட்டும் போதாது, முறையாக பாதங்களை கவனிக்க வேண்டும். ஏனெனில் பெண்கள் வீட்டில் நிறைய வேலைகளை செய்வதன் காரணமாக அவர்களால் வீட்டில் எப்போதும் காலணிகளை அணிந்து கொண்டே இருக்க முடியவில்லை. மேலும் சிலர் அழகான நடை வேண்டும் என்பதனால், உயரமான ஹீல்ஸ் போடுவது என்று இருக்கின்றனர்.


ஆனால் ஆண்களின் பாதங்கள் எப்போதும் பெண்களை விட மென்மையாக தான் இருக்கும், ஏனெனில் அவர்களின் பாதங்கள் எப்போதும் ஷூ மற்றும் சாக்ஸ்களால் மூடியிருக்கும். ஆகவே அவர்கள் பாதங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் பெண்கள் நிறைய பாத பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். அத்தகைய பொதுவாக பெண்கள் அனுபவிக்கும் பாத பிரச்சனைகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதற்கேற்ப இனிமேல் நடந்து கொள்ளுங்களேன்...

* குதிகால் வெடிப்பு

ஆண்களுக்கும், பெண்களுக்கும் வரும் பாத பிரச்சனைகளில் ஒன்று தான் குதிகால் வெடிப்பு. இருப்பினும் பெண்கள் தான் முக்கியம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் பாதங்களில் அழுக்குகள் அதிகம் இருப்பதாலும், மென்மையிழந்து விடுவிதாலும், வெடிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் பாதங்களில் இயற்கையான எண்ணெய் சுரப்பிகள் இல்லை. ஆகவே நாம் தான் தினமும் கால்களுக்கு எண்ணெய்கள் அல்லது ஏதேனும் மாஸ்சுரைசரை அவ்வப்போது தடவ வேண்டும். மேலும் குதிகால் வெடிப்பு இருந்தால், அது போகும் வரை, கால்களை ஷூ மற்றும் சாக்ஸ்களால் மூடியிருக்க வேண்டும்.

* பாதத்தில் படை

இந்த நோய் கால்களின் விரல்களுக்கிடையே புண் அல்லது அரிப்பு என்று ஏற்படும். இந்த படை பாதங்களில் நாளடைவில் வெடிப்புகளோடு, பாதத் தோல்களை செதில் செதிலாக ஏற்படுத்தும். ஆகவே தினமும் பாதகளை குளிக்கும் போது நன்கு சுத்தமாக கழுவ வேண்டும்.

* வறண்ட சருமம்: 

எண்ணெய் சுரப்பிகள் பாதங்களில் இல்லாததால் பாதங்களைச் சுற்றி ஒருவித வறட்சி காணப்படும். அதிலும் இத்தகைய வறட்சி குதிகால்களில் தான் அதிகம் காணப்படும். இந்த பிரச்சனைக்கும் அனைவரும் தினமும் பாதிக்கப்படுவர். ஆகவே தினமும் இரண்டு முறை பாதங்களுக்கு மாஸ்சுரைசரை தடவ வேண்டும். அதிலும் காலையில் குளித்ததும், இரவில் படுக்கும் முன்னும் தடவினால் நல்லது. முக்கியமாக அவ்வாறு இரவில் படுக்கும் முன் தடவும் போது, பின்னர் எங்கும் நடக்காமல் இருக்க வேண்டும். இதனால் கால்களில் உள்ள செல்கள் அந்த எண்ணெயை உறிஞ்சிவிடும், பின் பாருங்கள் நாளடைவில் பாதங்கள் நன்கு மென்மையாக இருக்கும். வேண்டுமென்றால் தினமும் குளிக்கும் போது, அந்த நீரில் சிறிது எண்ணெய் விட்டு குளித்தால், உடல் முழுவதும் ஏற்படும் வறட்சியை தடுக்கலாம்.

* செருப்பு கடிப்பது:

ஏதேனும் புதிதான காலணிகளை அணிந்தால், அப்போது சருமத்தில் சிவப்பு நிறத்தை அறியலாம். சிலசமயங்களில் புண் ஏற்பட கூட வாய்ப்புள்ளது. ஆகவே எப்போது காலணிகளை வாங்கும் போது பாதங்களை இறுக்குமாறு வாங்க வேண்டாம். மேலும் சில நாட்களுக்கு 2-3 மணிநேரம் தொடர்ச்சியாக போடாமல் இருப்பது நல்லது. இதனால் சருமத்தில் புண் அல்லது சிவப்பு நிறம் ஏற்படுவதை தடுக்கலாம்.

* பூஞ்சை தொற்று நோய்: 

பாதங்களில் அதிகமான வியர்வை ஏற்படும் போது பாதங்களில் ஒரு வித துர்நாற்றம் ஏற்படும். அப்போது பாதங்களுக்கு எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் இருந்தால், பூஞ்சைகளால் தொற்றுநோய் ஏற்படும். மேலும் பெண்கள் பாதங்கள் அழகாக இருக்க நீளமான கால் நகங்களை வைத்துக் கொள்வார்கள். இதனால் விரல்களின் இடுக்குகளில் எளிதாக பூஞ்சைகள் புகுந்து, நோயை ஏற்படுத்திவிடும். மேலும் அவ்வாறு இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்கும் போது, விரல்களில் கடுமையாக வலிகள், சிவப்பு நிறமாதல் போன்றவை ஏற்படும். ஆகவே எந்த ஒரு நோயும் கால் விரல்களின் நகங்களில் ஏற்படாமல் இருக்க, ஸ்பா சென்று அல்லது வீட்டிலேயே சரியாக சுத்தம் செய்தால் தவிர்க்கலாம்.

வேண்டுமென்றால் வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒரு முறை ஸ்பா சென்று பாதங்களுக்கு சரியான பராமரிப்பு கொடுத்தால், பாதங்களில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.